மீண்டும் உயரும் எரிவாயு விலை.

0

இலங்கையில் எரிவாயு விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தாய்லாந்தில் உள்ள சியாமிடம் இருந்து எரிவாயு வாங்குவதை நிறுத்திவிட்டு, முந்தைய விநியோகஸ்தரான ஓமானிடம் இருந்து எரிவாயு வாங்கத் தயாராகி வருவதே இதற்குக் காரணம் என சொல்லப்படுகின்றது.

அதிக கட்டணம்
அத்துடன் ஒரு தொன் ஜெம் மெட்ரிக் தொன்னுக்கு சியாமை விட 34 அமெரிக்க டொலர் அதிகமாக ஓமான் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டியுள்ளது.

இந்த நிலை மீண்டும் எரிவாயு விலை அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் ஓமானிலிருந்து எரிவாயு வடிகட்டப்பட்ட பிறகு, எரிவாயு சிலிண்டர் ஒன்று ரூ.1000 அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை சாதாரண வீட்டு எரிவாயு சிலிண்டரினால் ஏற்கனவே 2500 ரூபா நஷ்டம் ஏற்படுவதாக லிட்ரோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply