திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

0

இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று மாலை திடீரென கனமழை கொட்டி தீர்த்தது.

இந்த கனமழை அரை மணி நேரத்திற்கும் மேலாக திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல் திருத்தணி பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. திருத்தணி, அரக்கோணம் நெடுஞ்சாலையில் உள்ள கால்வாய் நீருடன் மழை நீரும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நடந்து செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் கழிவுநீருடன் மழை நீர் கலந்து சாலைகளில் ஓடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் இந்த திடீர் மழையால் இரவில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

Leave a Reply