இலங்கை முழுவதும் மோசமான பொருளாதார தட்டுப்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆகவே பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என காவற்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் ஒவ்வொரு பகுதிகளிலும் பொலிஸார் ஒலிபெருக்கி ஊடாக பொது மக்களை எச்சரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதற்கமைய வீடுகளில் இருக்கும் மக்கள் கதவு, ஜன்னல்களை பூட்டிவிட்டு வீட்டிற்குள் அவதானமாக இருக்கமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் வாகனங்கள் தொடர்பிலும் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.