காவல்துறையினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து நெலும் பொகுண தொடக்கம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரை போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்தனர்.
இந்நிலையில் குறித்த பேரணிக்கு தடை விதிக்குமாறு காவல்துறை நீதிமன்றிடம் கோரிக்கையை முன்வைத்தது.
தற்போது குறித்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.