யாழ் பொது நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆவது ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.

0

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.

இந்நிலையில் 1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு, வன்முறை குழுவொன்றினால் குறித்த நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்டது.

அத்துடன் யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட காலத்தில், அங்கு சுமார் 97,000 அரிய நூல்கள் காணப்பட்டன.

தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் குறித்த நூலகம் கருதப்பட்டது.

இதன்போது அங்கிருந்த பல பாரம்பரிய நூல்கள் தீயினால் அழிவடைந்தன.

யாழ் நூலகம் 1833 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது.

முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்பு களுடனும் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு, மிக விரைவில் மக்களின் ஆதரவுடன் வளர்ச்சியடைந்தது.

யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் இருந்து கிடைக்கப் பெற்ற நூல்கள், நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள், யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பழமையான பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை நூலகத்தில் வைக்கப்பட்டிருந்தன.

மேலும் 1981 ஆம் ஆண்டு தீயூட்டி அழிக்கப்பட்டதன் பின்னர் ,2004 ஆம் ஆண்டில் நூலகம் புனரமைக்கப்பட்டு மீளத் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply