பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு.

0

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை இன்றுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில் தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணத்தால் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட அனர்த்தங்களால் இன்றைய தினம் தங்களது பயிற்சி மையங்களுக்கு செல்ல முடியாத பரீட்சார்த்திகள், அருகிலுள்ள பரீட்சை மையங்களுக்கு செல்ல முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல். ம். டி. தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சீரற்ற வானிலைக்கு மத்தியில், தடையின்றி பரீட்சைகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தங்களின் பரீட்சை மையங்களுக்கு செல்ல முடியாத மாணவர்களின் பெற்றோர்கள் குறித்த இடத்தில் இருந்து 117 என்ற துரித இலக்கத்திற்கு அழைக்க வேண்டும்.

இதன் பிரகாரம் குறித்த மாணவர்களை புதிய பரீட்சை மையத்திற்கு அனுப்ப தாங்கள் நடவடிக்கை எடுப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல். எம். டி தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply