இன்றும் எரிவாயு விநியோகம் இடம் பெறாது.

0

நாடு பூராகவும் இன்றைய தினமும் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் இடம்பெறாது என லிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம் , பொதுமக்கள் அனைவரும் விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்கான வரிசையில் காத்திருப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் கடந்த மூன்று நாட்களாக லிட்ரோ நிறுவனத்தினால் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் பொதுமக்கள் எரிவாயு கொள்கலன்களை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்தடையவிருந்த 3500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் , நாட்டுக்கு வருவதற்கு மேலும் தாமதம் ஆகும் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த கப்பலுக்கு இலங்கையில் எரிபொருள் வழங்க முடியாமல் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக அந்த கப்பல் இந்தியாவிற்கு சென்றுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த அந்த எரிவாயு கப்பல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடையும்.

ஆகவே எதிர்வரும் திங்கட்கிழமை முதல் எரிவாயு விநியோகத்தை முன்னதாக கூடியதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply