தேசிய மின் கட்டமைப்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களுக்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதற்கு உதவுமாறு அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ஷ மின்துறை நிபுணர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இந்நிலையில் புதுப்பிக்க எரிசக்தி மூலகங்களை மின் உற்பத்திக்கு பங்களிப்பதில் நிலவும் பிரச்சனை குறித்து ஆராயும் பொருட்டு நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு மொத்த மின் தேவையில் 70 சதவீத புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களில் இறருந்து உற்பத்தி செய்வது அரசாங்கத்தின் இலக்காகும்.
இதுவரையில் சூரிய சக்தியில் இருந்து கிட்டத்தட்ட 700 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது.
மேலும் அதனை சரி செய்து நிலவு மின்சார நெருக்கடிக்கு தீர்வு காண நடைமுறை ரீதியாக உதவ முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.