பேருந்து கட்டணங்கள் மேலும் அதிகரிக்கப்படும்.

0

நாட்டில் எரிபொருட்களின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பேருந்து கட்டணம் உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டணங்களில் திருத்தத்தை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படாத வகையில் கட்டணங்களை அதிகரிக்குமாறு போக்குவரத்து துறையிடம் கோரிக்கை விடுப்பதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்ப பேருந்து கட்டணம் 25%-30% வரை அதிகரிக்கப்படும் என்பதுடன் புதிய பேருந்து கட்டணங்கள் இன்று அறவிடப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply