யாழ் மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்.

0

க.பொ.த. சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் , இசை நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களில் ஒலிபெருக்கி சாதனங்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உயித் என்.பி. லியனகே தெரிவித்தார்.

அத்துடன் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், யாழ். மாவட்டத்தில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு நாம் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என என்.பி. லியனகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply