நாடளாவிய ரீதியில் இன்று எரிவாயு விநியோகம் இடம்பெறாது.

0

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான 6.5 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவு நேற்றைய தினம் செலுத்தப்பட்டதாக லிட்ரோ நிறுவனத்தலைவர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த கப்பல்கள் மூலம் 7500 மெட்ரிக் டன் எரிவாயு நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.

இதன் முதலாவது கப்பல் 3,500 மெட்ரிக் டன் எரிவாயு எதிர்வரும் வியாழக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply