சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட 67 பேர் அதிரடி கைது.

0

சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் 67 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் இரவு சல்லி சம்பல் தீவு மற்றும் திருகோணமலை கடற்பகுதியில் கடற்படையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து விசேட சோதனை நடவடிகையை முன்னெடுத்தனர்.

இதன்போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த கைது நடவடிக்கையின் போது 02 முச்சக்கர வண்டிகள், ஒரு கெப்ரக வாகனம் மற்றும் மகிழுந்து ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply