வாகனங்களின் எரிபொருள் தங்கைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகம்.

0

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள வாகனங்களின் எரிபொருள் தாங்கி களுக்கு மாத்திரமே நேரடியாக பெட்ரோல் விநியோகிக்கப்படும் என லங்கா ஐஓசி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து கலன்கள் , பீப்பாய்களில் பெட்ரோல் வழங்கப்படாது என லங்கா ஐஓசி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply