பரீட்சைகள் திணைக்களம் விடுத்த விசேட தகவல்.

0

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை தினமாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை கடமைகளுக்குரிய பணிக்குழாமினர், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவாறு கடமைகளுக்கு சமுகமளிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், பரீட்சை மண்டபமாக பயன்படுத்தப்பட உள்ள சகல பாடசாலைகளின் அதிபர்களும், இன்றைய தினம் பாடசாலைகளுக்கு சமுகமளித்து மண்டபங்களை ஒழுங்கமைக்கும் பணிக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன அறியப்படுத்தியுள்ளார்.

மேலும் பரீட்சை மேற்பார்வையாளர்களினதும், அதிபர்களினதும் சிபாரிசுக்கு அமைய பரீட்சை நிலைய கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக நோக்குநர்களாக பெயரிடப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் மேற்பார்வையாளர்களின் அழைப்புக்கு அமைய, உரிய பணிக்கு சமுகமளித்தல் வேண்டும்.

Leave a Reply