குடும்பத்தில் தொடர்ந்து மனக்கஷ்டம் வந்து கொண்டே இருந்தால் ஏற்ற வேண்டிய விளக்கு என்ன?

0

குடும்பத்தில் தொடர்ந்து மனக் கஷ்டங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தால் இந்த ஒரு தீபம் ஏற்றி வைத்தால் கஷ்டங்கள் குறைந்து மகிழ்ச்சி ஏற்படும் என்பது ஐதீகம்.

அம்பாளுக்கு உரிய விசேஷமான வேப்பிலை கொண்டு ஏற்றப்படும் இந்த தீபம் முறையாக ஏற்றி வழிபடும் பொழுது நமக்கு குடும்பத்தில் இருக்கும் சண்டை, சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்க துவங்கும்.

இதை எப்படி ஏற்றுவது? என்று தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஆடிவெள்ளியில் வேப்பிலை இல்லை என்றால் தெய்வ சக்தியும் இல்லை! அந்த அளவிற்கு வேப்பிலைக்கு மகா சக்தி உண்டு.

மகா சக்தி படைத்த இந்த அம்மனுக்கு பிடித்தமான வேப்பிலை கொண்டு ஏற்றப்படும் தீபம் வேப்பிலை தீபம் என்று கூறப்படுகிறது.

வேப்பிலை மீது வைத்து ஏற்றப்படும் இந்த தீபத்திற்கு அம்பாளின் அருளைப் பெற்றுக் கொடுக்கும் சக்தி உண்டு.

சதா சர்வகாலமும் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் சண்டை, சச்சரவுகள் என்று இருந்து கொண்டே இருந்தால் அந்த வீட்டில் எதிர்மறை சக்திகள், துர்தேவதைகள் ஆதிக்கம் செலுத்துகிறது என்று அர்த்தம். இவற்றிலிருந்து நாம் விடுபடுவதற்கு இந்த வேப்பிலை தீபத்தை வெள்ளிக்கிழமை அன்று ஏற்றி வழிபட்டு வரலாம்.

பொதுவாக இந்த தீபத்தை தினமும் ஏற்றி வழிபட்டால் சிறந்த பலன் உண்டு.

ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த பரிகாரத்தை இனி பார்ப்போம். முதலில் மஞ்சள் கொண்டு சதுர வடிவத்தில் ஒரு கோலத்தை போட்டுக் கொள்ளுங்கள்.

பின்பு அதன் மீது வேப்பிலைக் கொத்தாக வைக்க வேண்டும்.

வேப்பிலையின் நுனி கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்குமாறு வையுங்கள்.

ஒரு கொத்து வேப்பிலையை அப்படியே வையுங்கள்.

பின்பு அதன் மீது 2 சுத்தமான புதிய அகல் விளக்குகள் வாங்கி வையுங்கள்.

ஒருமுறை வாங்கி வைத்தால் மீண்டும் அதே விளக்கை கொண்டு தீபம் ஏற்றிக் கொள்ளலாம்.

பின்பு அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

உங்களுடைய குலதெய்வம், இஷ்ட தெய்வம் அல்லது எந்த விதமான அம்மனாக இருந்தாலும் பரவாயில்லை,

அம்மனுக்கு மிகவும் பிடித்தமான இந்த வேப்பிலை தீபத்தை இப்படித் தான் ஏற்ற வேண்டும்.

திரியின் நிறம் மஞ்சள் அல்லது சுத்தமான வெள்ளை நிறத்தில் இருப்பது நன்று.

நைவேத்தியம் படைக்க பெரிதாக எதையும் செய்யத் தேவையில்லை.

கற்கண்டு அல்லது பேரீச்சம் பழம் வைத்து வழிபட்டால் போதும்.

அந்த அம்பாள் மனமார ஏற்றுக் கொண்டு உங்களுக்கு அருள் புரிவார் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

வேப்பிலை மீது வைத்து ஏற்றப்படும் இந்த அகல் விளக்கு தீபம் ஒளிரும் பொழுது மனமார அதைக் கண்டு கொண்டே உங்களுடைய பிரார்த்தனைகளை வையுங்கள்.

குடும்பத்தில் எந்த விதமான சண்டை, சச்சரவும் இல்லாமல் இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் நீங்க வேண்டும்.

கணவன் மனைவிக்கு இடையே சிக்கல்கள் நீங்கி ஒற்றுமை பலப்பட வேண்டும்.

அன்னோன்யமாக வாழ வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு அம்பாளை வழிபட இது போல ஒவ்வொரு வாரமும் நீங்கள் செய்து பாருங்கள், சில வாரங்களிலேயே உங்களுக்கு நல்ல ஒரு மாற்றம் தெரிய ஆரம்பிக்கும்.

Leave a Reply