க.பொத சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சாத்திகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு.

0

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சாத்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சாத்திகள் வினாத்தாள்களுக்கு விடையளிக்கும் நேரத்தில் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தர்மசேன விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத்தராதார சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது

மேலும் பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையத்திற்கு பிரவேசிக்கும் போதும் மற்றும் வெளியேறும் போதும் முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply