பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக ஜகத் சமரவிக்ரம, பதவிப் பிரமாணம் செய்து கொண்டாா்.
இதற்கமைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் குறித்த பதவிப்பிரமான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் மறைவை அடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்கு ஜகத் சமரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



