கமலை வைத்து மதுரை சம்பவத்துக்கு ரெடியான பா.இரஞ்சித்.

0

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அத்துடன் இந்த படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் ‘விக்ரம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில் கமல்ஹாசன், இயக்குனர் பா.ரஞ்சித், பார்த்திபன், நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், சிலம்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட இயக்குனர் பா.இரஞ்சித், கமல்ஹாசன் நடிக்கும் படத்தை அவர் இயக்குவது குறித்த அறிவிப்பை மேடையில் பா.இரஞ்சித் அறிவித்தார்.

அப்பொழுது அவர் பேசியதாவது, கமல்ஹாசன் சாருடன் இணைந்து விரைவில் பணியாற்றப் போகிறேன். மிகவும் ஆர்வத்துடன் உள்ளேன். அவரை வைத்து ஒரு மதுரைப் படம் பண்ணவே ஆசை.

அவர் நடித்த விருமாண்டி எனக்குப் பிடித்த படம். ஆனால் இதில் கமல் வேஷ்டி சட்டை உடன் வரமாட்டார் என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply