கடல் தொழிலுக்குச் சென்ற வந்த நபர் சடலமாக மீட்பு.

0

யாழ்- கொழும்புத்துறை பகுதியிலிருந்து கடல் தொழிலுக்குச் சென்று இருந்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் நேற்றையதினம் அவரது மகனுடன் கடல் தொழிலுக்கு சென்றிருந்த வேளையில் கடலில் தவறி விழுந்து காணாமல் போயிருந்தார்.

குறித்த பகுதி மீனவர்கள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில் இன்றையதினம் நெடுந்தீவு கடற்பரப்பில் அவரது சடலம் கரையொதுங்கியுள்ளது.

மேலும் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியை சேர்ந்த 53 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply