71 எம்.பிக்களுக்கு புதிய வீடுகள்.

0

நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் 71 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர்களுக்கு விரைவாக புதிய வீட்டொன்றை ஒன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன் தலவத்துக் கொட பகுதியில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 100 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன.

அவற்றை விரைவில் நிறைவு செய்து பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு இடம்பெற்ற வன்முறை காரணமாக சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் தனித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பிரகாரம் நாடாளுமன்றம் தலையிட்டு அவர்களுக்கு விரைவில் வீடுகளை வழங்க தீர்மானித்துள்ளது

Leave a Reply