தற்போது நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந்நிலையில் மருந்து தட்டுப்பாடு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை உள்ளிட்ட பிரதான வைத்தியசாலைகளில் அவசரமற்ற சகல சத்திர சிகிச்சைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் மருந்து மற்றும் சிகிச்சை உபகரணங்களின் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு சத்திர சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



