இன்றைய மின் துண்டிப்பு தொடர்பில் வெளியான தகவல்.

0

நாடு பூராகவும் சுழற்சி முறையில் மின்தூண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் இன்று மின் துண்டிப்பு இடம்பெறாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க அறிவித்துள்ளார்.

விசாக பூரண தினத்தை முன்னிட்டு குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் மதுபான சாலைகள் அனைத்தும் நேற்றும் இன்றும் மூடப்பட்டிருக்கும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் குறித்த தினங்களில் அனுமதிப்பத்திரம் விதிமுறைகளை மீறி செயல்படும் உரிமம் பெற்ற மதுபானசாலை உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுவரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply