சுப்ரீம் கோர்ட்டு விடுத்த அதிரடி.

0

இளங்கலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு ஜூலை 17ம் திகதியும் , முதுகலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு மே 21ம் திகதியும் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது

இந்நிலையில் கடந்த ஆண்டுக்கான முதுநிலை மாணவா் சோக்கை கலந்தாய்வு இன்னும் நிறைவடையாத நிலையில், நடப்பாண்டுக்கான தேர்வை நடத்துவது முறையாக இருக்காது என்பதால் இந்திய மருத்துவ சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை தள்ளிவைக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தள்ளி வைக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் கிளம்பியது.

இந்த நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புக்கான 2022 நீட் தேர்வை தள்ளி வைக்ககோரிய சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பெரும்பாலானவர்கள் நீட் 2022 தேர்வு வேறு தேதிக்கு ஒத்தி வைக்க விரும்புகின்றனர்.

கடந்த 2021ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் கலந்தாய்வு தற்போது நடைபெறுவதால் இது குழப்பத்தை ஏற்படுத்தும்.

எனவே வரும் 21ம் தேதி நடைபெற உள்ள முதுதிலை நீட் 2022 தேர்வு ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும், நாங்கள் தலையிட விரும்பவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதன்பின் நீட் முதுநிலை தேர்வை வரும் 21-ஆம் தேதி நடத்துவதற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்து, முதுநிலை நீட் 2022 தேர்வு நடக்கும் தேதியில் மாற்றம் இல்லை எனவும் கூறியுள்ளது.

இதனால் மே 21-ஆம் தேதி திட்டமிட்டபடி நீட் முதுநிலை தேர்வை நடத்துவதற்கு தடையில்லை என கோர்ட்டு கூறியுள்ளது.

முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு.

மே 21ஆம் தேதி நீட் முதுநிலை மருத்துவ தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply