ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில், மூன்று ஸ்பூன் அரிசி மாவு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
பின் இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்யவும், பின் 15 நிமிடங்கள் காத்திருந்து பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வர சருமத்தில் உள்ள கருமைகள் நீங்கி சருமம் பட்டுப்போல் ஜொலிக்கும்.
அவ்வாறு ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு, இரண்டு ஸ்பூன் தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்பொழுது Face Packs தயார் இதனை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் காத்திருக்கவும்.
பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும் இவ்வாறு தினமும் செய்து வர சருமத்தில் ஏற்படும் வறட்சி நீங்கும்.