வீட்ல கெட்ட சக்தி இருக்கா?… இருந்தா என்ன பரிகாரம் பண்ணலாம்?…

0

நாம் எவ்வளவு தான் வாஸ்து பார்த்து வீடு கட்டினாலும் சிறுசிறு வாஸ்து தோஷங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றால் எந்த இடைஞ்சலும் வராத அளவுக்கு சின்ன சின்ன பரிகாரங்கள் செய்து, வீட்டிலேயே அவற்றை நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.

பூஜைகளின் மூலம் வாஸ்து தோஷங்களை நீக்கலாம். அதற்காகப் பெரிய சிரமங்கள் எதுவும் படத்தேவையில்லை. வீட்டில் தினமும் ஊதுவர்த்தி காட்டி சாமி படங்களுக்கு பூஜை செய்து வந்தாலே போதும். வீட்டில் எந்த கெட்ட சக்தியும் அண்டாது.

வீட்டுக்குள் ஆட்கள் இருக்கும்பொழுது உள்புறமாக கதவை அடைத்து வைக்கக்கூடாது. கதவை பெரும்பாலும் திறந்து தான் வைத்திருக்க வேண்டும்.

வீட்டின் வடகிழக்குப் பகுதி எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் அந்த மூலையில் எந்த பொருட்களையும் போட்டு அடைத்து வைத்திருக்கக் கூடாது. மற்ற இடங்களை விடவும் வடகிழக்குப் பகுதி அதிக அளவு சுத்தமாக இருப்பது அவசியம்.

கதவுகளின் இடுக்குகளில் எண்ணெய் விட்டு வைத்திருக்க வேண்டும். கதவுகளைத் திறக்கும்போதும் மூடும்போதும் கீச்சு கீச்சென சத்தம் வரக்கூடாது. அதனால் கூட வீட்டுக்கு தோஷம் உண்டாகுமாம். அதனால் அடிக்கடி கிரீஸ் தடவி, கதவுகளை சத்தமில்லாமல் வைத்திருக்க வேண்டும். வீட்டிலிருக்கும் மோட்டார் பம்புகளை வடகிழக்குப் பகுதியில் தான் வைத்திருக்க வேண்டும். அப்படி வைப்பதால் வீட்டில் அமைதி உண்டாகும்.

பக்கத்தில் ஏதேனும் மாடுகள் இருந்தால் அவற்றிற்கு தினமும் ஏதாவது உணவை ஊட்டிவிடுங்கள்.

தினமும் மாலை நேரங்களில் கட்டாயமாக வீடுகளில் விளக்கேற்றி வைக்க வேண்டும். குறிப்பாக, தண்ணீர் தொட்டி இருக்கும் இடத்துக்கு அருகே விளக்கேற்றி வைத்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் நீங்கும். – Source: tamil.eenaduindia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply