இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

0

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்றைய தினமும் மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன் பிரகாரம் இன்று A முதல் W வரையான வலயங்களில் முற்பகல் 9.30 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 5.30 முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் இவ்வாறு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும் CC வலயங்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் மூன்று மணித்தியாலம் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply