இன்று முதல் முதலாம் தவணை கற்றல் செயற்பாடு ஆரம்பம்.

0

நாட்டில் அனைத்து பாடசாலைகளினதும் முதலாம் தவணை கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்தில் நீடிக்கும் தீர்மானத்தை தற்காலிகமாக கைவிடுவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன் புதிய தவணை பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியால தயாரிப்பதற்கு கல்வி அமைச்சு முன்னர் தீர்மானம் எடுத்தது.

இருப்பினும் இந்த ஆண்டுக்கான பாடத்திட்டங்களை உள்டக்குவதற்கு வரையறுக்கப்பட்ட காலஅவகாசம் காணப்படுவதால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் நீடிப்பதன் மூலம் கற்பித்தலுக்கான காலத்தை கூடுதலாக வழங்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் பாடசாலை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு , அரச மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துகள் வழமையான முறையில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply