சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக ஐந்து அத்தியாவசிய நுகர்வு பொருட்கள் அடங்கிய நிவாரண பொதியை சலுகை விலையில் வழங்க வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் 5 கிலோ நாட்டரிசி, 5 கிலோ சம்பா அரிசி, 400 கிராம் பால் மா, ஒரு கிலோ சிவப்பு சீனி மற்றும்100 கிராம் தேயிலை என்பன குறித்த பொதியில் உள்ளடக்கப் படுகின்றன.
மேலும் குறித்த நிவாரண பொதி 1950 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் சந்தைகள் உடன் ஒப்பிடுகையில், இந்த ஐந்து பொருட்களின் கொள்முதல் விலையை விட நுகர்வோர் 700 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட நன்மைகளைப் பெறுவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த நிவாரண பொதி நாளை முதல் லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.



