சித்திரைப் புத்தாண்டு தினங்களான 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மின் துண்டிப்பு இடம்பெறாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் தற்போது பெற்றுக்கொள்ள படுவதாக அதன் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் நீர்மின் நிலையங்களை அண்மித்த பகுதிகளில் ஓரளவு மழை பெய்துள்ளது.
இதன்பிரகாரம் இந்த வாரத்தை விட எதிர்வரும் வாரத்தில் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு காலம் மேலும் குறைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



