இன்று முதல் விசேட பேருந்து சேவைகள், தொடருந்து சேவைகள் முன்னெடுப்பு.

0

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு விசேட பேருந்து சேவைகளை இன்று முதல் முன்னெடுக்க போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

இந்நிலையில் வழமையாக சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளுக்கு மேலதிகமாக, இந்த பேருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக போக்குவரத்து சபையில் ஈடுபடவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் கிங்ஸ்ஸி ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

இதன் பிரகாரம் மேலதிகமாக 1000 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மேலும் போதுமான அளவு டீசல் கிடைக்காவிட்டால், எதிர் வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் தூர பிரதேசங்களுக்கு சேவையில், தனியார் பேருந்துகள் ஈடுபட மாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தூர மற்றும் விசேட தொடருந்து சேவைகளை நடத்த தொடருந்து திணைக்களம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply