இலங்கையில் நாளுக்கு நாள் சுழற்ச்சி முறையில் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்றைய தினமும் மின் துண்டிப்பை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்பிரகாரம் ஆறு மணித்தியாலங்களும், 30 நிமிடங்களுக்கும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
A தொடக்கம் L வரையான வலயங்களிற்குட்பட்ட பகுதிகளில் காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை 4 மணித்தியாலங்களும், மாலை 5 மணிமுதல் இரவு 10 மணிவரை 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் P தொடக்கம் W வரையான வலயங்களிற்குட்பட்ட பகுதிகளில் காலை 10 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை 4 மணித்தியாலங்களும், மாலை 6 மணி தொடக்கம் இரவு 11 மணிவரை 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



