நாடாளுமன்றம் மற்றும் அதன் வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் இடம்பெற்றது.
அத்துடன் நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
மேலும் நாடாளுமன்றில் 113 என்ற பெருமையை காண்பிக்கும் குழுவுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயாராக உள்ளதாக அரச தலைவர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.



