கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்து வகையான உள்ளூர் அரிசி வகைகளின் விலைகளும் 3 ரூபாய் முதல் 13 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் அதிகரித்துள்ளன.
அத்துடன் இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளின் விலைகள் ஒன்பது ரூபாய் முதல் 18 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் அதிகரித்துள்ளன.
மேலும் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமையால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



