இரண்டு நாட்களாக நங்கூரம் இடப்பட்டிருந்த டீசல் கப்பலுக்கு டொலர் செலுத்தப்பட்டது.

0

கடந்த 12 நாட்களாக கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருந்த டீசல் மற்றும் விமான எரிபொருள் தாங்கி வருகை தந்த கப்பலுக்கு 42 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 20,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 20,000 மெட்ரிக் டன் விமான எரிபொருளை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இருப்பினும் கப்பலுக்கான தாமத கட்டணம் இதுவரை கணக்கிடப்படவில்லை.

மேலும் இந்தியா கடன் உதவியுடன் 35,000 மெட்ரிக் டன் பெட்ரோல் தாங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக வலு சக்தி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply