எரிவாயு பிரச்சனைக்கு தீர்வு.

0

தற்போது தொடர்ச்சியாக லிட்ரோ நிறுவனம் எரிவாயு விநியோகத்தை முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில் எரிவாயு தாங்கிய மேலும் இரண்டு கப்பல்கள் நாளை மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாக அதன் தலைவர் தெஷார ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 10 நாட்களுக்குள் ஒரு மில்லியன் எரிவாயு கொள்கலனை சந்தைக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் சந்தையில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு நீங்கி எரிவாயு கொள்வதற்கான நீண்ட வரிசை இல்லாமல் செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நாடினால் அந்த தேவையை பூர்த்தி செய்வதற்கு பொதுவாக 80,000 முதல் ஒரு இலட்சம் வரையிலான எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்க வேண்டிய தேவை உள்ளது.

Leave a Reply