நாட்டில் தற்போது டெங்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
ஈனலயில் கடந்த வாரத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் துரித அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்பிரகாரம் , கடந்த வாரத்தில் மாத்திரம் 733 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை, கடந்த வாரம் பதிவான டெங்கு நோயாளர்களில் 44.5% பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



