இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் இரு வேறு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது குறித்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதில் இருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி துறைமுகம் அழைத்து செல்லப்பட்டு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இரணை தீவு அருகே மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இங்கு கைது செய்யப்பட்டவர்கள் முழங்காவில் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



