கட்டுகஸ்தொட்ட பகுதியில் தீ விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.