நாடு பூராகவும் இன்று முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம்.

0

நாடுபூராகவும் உள்ள பிரதேசங்களுக்கு சமையல் எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் நாளொன்றுக்கு சுமார் 120,000 வீட்டிற்கு தேவையான சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது நாட்டில் நிலவி வரும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு எதிர்வரும் சில தினங்களில் தீர்வு கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பு துறைமுகத்திற்கு அண்மையில், நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பலிலிருந்து 3,500 மெட்ரிக் டன் எரிவாயுவை தரையிறக்க பணிகள் நேற்று மாலை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply