நாட்டின் பன் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய, தென், மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
இதனைத் தொடர்ந்து ஊவா மகனுக்கு சிறிதளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அவ்வாறு சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்று மாலை 4 மணிக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே பொதுமக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.



