விநாயகருக்கு இந்த பரிகாரத்தை மட்டும் தவறாமல் செய்து வாருங்கள்.

0

ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் தான் நினைக்கின்ற அனைத்தும் நடந்து விட்டால் வாழ்க்கை என்பது இன்பமாக மாறி விடும்.

ஆனால் கர்மா என்பது நாம் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் நமக்கு எந்த நேரத்தில் எது நடக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கிறது.

அப்படி உங்களுக்கு ஒரு விஷயம் நடக்க வேண்டுமென்றால் அதற்கான நேரம் வந்த பிறகு தான் அது வெற்றியாக மாறும்.

இப்படி ஒருவரின் வாழ்க்கையில் மாற்றம் வர வேண்டும், அதிலும் நாம் நினைக்கின்ற நேரத்தில் வர வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் நமது கர்மாக்களின் தீவிரம் அனைத்தும் குறைந்து நமக்கான நல்ல காலம் வர வேண்டும்.

அதற்கு வினைகளைத் தீர்க்கும் விநாயகரை வணங்கி வர நல்ல பலன் கிடைக்கும்.

எனவே விநாயகருக்கு இந்த பரிகாரத்தை மட்டும் தவறாமல் செய்து வாருங்கள்.

இந்த பரிகாரத்தை சனிக்கிழமை தோறும் தொடர்ந்து ஏழு சனிக்கிழமைகள் செய்ய வேண்டும்.

அதற்கு எப்பொழுதும் போல வெள்ளிக்கிழமை அன்று மறுநாள் பூஜைக்கான அனைத்து விஷயங்களையும் தயார் செய்ய வேண்டும்.

அதாவது பூஜை பாத்திரங்களை பூஜை செய்வதற்கு ஏற்றவாறு சுத்தம் செய்து மஞ்சள், குங்கும பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

மறுநாள் காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, இந்த பூஜையை காலை 8 மணிக்குள் செய்திட வேண்டும்.

எப்போதும் போல விளக்கு ஏற்றி, தீபாராதனை காண்பிக்க வேண்டும்.

பிறகு பூஜை அறையில் ஒரு சிறிய பானையில் தண்ணீர் ததும்பாத வண்ணம் முழுவதுமாக தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும்.

பின்னர் அதில் அருகம்புல்லை மூழ்குமாறு இட வேண்டும்.

அந்த நீரையும், எலுமிச்சை பழத்தையும் உங்கள் வீட்டு வாசலில் விநாயகர் சிலை இருந்தால் அதற்கு வைத்து அபிஷேகம் செய்யலாம்.

அல்லது வீட்டிற்கு அருகில் உள்ள அரச மரத்தடி விநாயகருக்கு அபிஷேகம் செய்யவேண்டும்.

பின்னர் ஒரு எலுமிச்சை பழத்தை விநாயகரின் பாதத்தில் வைத்து மனதார வேண்டிக்கொண்டு, ஒரு எலுமிச்சை பழத்தை மட்டும் வீட்டிற்கு கொண்டு வந்து, வீட்டின் வாசலில் கட்டி வைக்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து ஏழு வாரங்கள் செய்து வர நினைத்த காரியம் நிச்சயம் நடைபெறும்.

Leave a Reply