மக்களே அவதானம்! மற்றுமொரு புதிய திரிபு.

0

மீண்டுமொரு புதிய கொரோனா திரிபு அடையாளம்.!!

தற்போது உலகநாடுகளில் புதிய கொரோனா திரிபு உருவாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு உறுதிசெய்துள்ளது.

இந்நிலையில் “டெல்டக்ரோன்” என்ற புதிய கொரோனா திரிபு உருவாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வைரஸ் டெல்டா, ஒமிக்ரோன் வைரஸ் திரிபு வகைகளின் கலவையாக உருவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதனை உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் வகை குறித்த ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் மரியா வான் கெர்கோவ் உறுதிசெய்தார். இந்த திரிபினால் பாதிக்கப்பட்டவர்கள் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், வைரஸ் வகை குறித்து கவலைப்படுவதா என்பதை இப்போது உறுதி செய்யமுடியாது என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியது.

தற்போது சில பாதிப்புகள் பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

Leave a Reply