ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு.

0

ஆசிரியர் தேர்வு வாரியம் சமீபத்தில் 2022-ம் ஆண்டுக்கான அட்டவணையை வெளியிட்டது.

இந்நிலையத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு இருக்கிறது.

அந்த வகையில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வருகிற 14-ந் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிக்க கடைசி தேதி அடுத்த மாதம் (ஏப்ரல்) 13- ஆம் திகதி என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

www.trb.tn.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. தேர்வை பொறுத்தவரையில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1, தாள்-2 என்ற அடிப்படையில் நடைபெற உள்ளது.

தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் என அறிவிப்பில் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து இருக்கிறது.

மேலும் குறித்த விடயம் தொடர்பான தகவலினை http://www.trb.tn.nic.in/ என்ற
இணையதளத்தில் பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

Leave a Reply