மதுபிரியர்களுக்கு விடுக்கப்படுள்ள அதிர்ச்சி தகவல்.

0

நாட்டில் தற்போது மதுபான வகைகளை தயாரிக்க தேவையான எத்தனால் கிடைப்பதில்லை.

தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற காரணங்களால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் செவனகல, பெல்வத்த மற்றும் கலோயா சீனி தொழிற்சாலைகள் கரும்புகளை பயன்படுத்தி உள்நாட்டில் எத்தனோல் உற்பத்தி செய்கின்றன.

மற்றொரு நிறுவனம் சோளத்தைப் பயன்படுத்தி எத்தனால் தயாரிக்கிறது.

இந்த நிலையில் , 2020 ஜனவரி முதல் எத்தனால் இறக்குமதியை அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது.

அத்துடன் நாளாந்தம் 24,000 லீற்றர் எத்தனோல் உற்பத்தி செய்யப்படுவதாக கலோயா சீனி தொழிற்சாலையின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

பெல்வத்த சீனி தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 20,000 லீற்றரும் செவனகல தொழிற்சாலையில் 18,000 லீற்றரும் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் , திட்டமிட்டபடி எத்தனால் கிடைக்காவிட்டால், மார்ச் 22 முதல் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும் என, நாட்டின் முன்னணி மதுபான ஆலை கலால் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply