இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடு இன்று முதல் ஆரம்பம்.

0

இன்று முதல் இரண்டாம் தவணை கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

இன்னிலையில் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் மீள திறக்கப்படவுள்ளன.

இதற்காக மீண்டும் மாணவர்கள் குழுக்களாக பாடசாலைக்கு அழைத்ததற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் பிரகாரம் 20 மாணவர்களை உள்ளடக்கிய வகுப்புகள் தினமும் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

21 முதல் 40 வரையில் மாணவர்களின் எண்ணிக்கை கொண்ட வகுப்புகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு வெவ்வேறு வாரங்களில் தனித்தனியாக அழைக்கப்படவுள்ளனர்.

மேலும் 40 மாணவர்களுக்கு மேல் உள்ள வகுப்புகளை மூன்று சம பிரிவுகளாக பிரித்து கட்டாயப்படுத்தி முன்னெடுக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply