நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென் மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது.
இதன் பிரகாரம் அதன் தாக்கம் குறைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் சிறிதளவும் மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானில் நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.