அரச மருத்துவ அதிகாரிகள் சங்கதிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்.

0

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய குறித்த சந்திப்பில் சுகாதாரத்துறை மற்றும் வைத்தியர்கள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு நாட்டின் ஸ்திரத் தன்மை பேணுவதற்கு அரச சேவையில் முறையான சம்பள கட்டமைப்பை பேண வேண்டியதன் அவசியத்தையும், பொறுப்புக்கூறல் மற்றும் ஊழியர் கட்டமைப்பிற்குள் சம்பளத்தை நிர்ணயிப்பது தொடர்பில் அரசு மருத்துவர்கள் சங்கம் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் அமைச்சரவை பாத்திரங்களை ஊடாக சம்பள திருத்தங்களை மேற்கொள்ளாமல், சம்பள கொள்கைக்கு அமைய செயற்படுமாறு ஜனாதிபதியிடம் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply