ஜனாதிபதியின் பதவிக்காலம் நீடிப்பு.

0

ஒரே நாடு – ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மூன்று மாத காலப்பகுதிக்கு குறித்த பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை நேற்று வெளியிட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி நிறுவப்பட்ட ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலனிக்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.

மேலும் நாட்டின் சகல மாகாணங்களை உள்ளடக்கிய பொதுமக்கள் மற்றும் நிபுணர் குழுவின் கருத்துக்களை பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதால் ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply