தனியார் பேருந்து சேவை தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் வெளியிட்ட தகவல்.

0

பொது போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் சில நாட்களில் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அத்துடன் நிதியமைச்சர் வழங்கிய ஆலோசனையின் பிரகாரம் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Leave a Reply