மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு.

0

நாடளாவிய ரீதியில் இன்றும் (1) மூன்று மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக அதன் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 க்கும் இடையில், இந்த மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இதேவேளை, தேவையேற்படும் பட்சத்தில் மாத்திரம் இரவு வேளைகளில் 30 நிமிட மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

அதிக மின்சார கேள்வி நிலவும் பகுதிகளிலேயே இந்த 30 நிமிட மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஆகவே இன்று (01) மாலை 6 மணி முதல் இரவு 10 மணிக்குள் மின்சார பயன்பாட்டை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply